மழை காலங்களில் பயன்படுத்தப்படும் Red Alert மற்றும் Orange Alert என்பதன் பொருள் என்ன?

மழை காலங்களில் பயன்படுத்தப்படும் Red Alert மற்றும் Orange Alert என்பதன் பொருள் என்ன? 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கூற்றுப்படி, எதிர்பார்க்கப்படும் வானிலை    நிகழ்வுகளின் தீவிரத்தை  மக்களுக்கு வெளிப்படுத்த வானிலை எச்சரிக்கைகளில் வண்ணக் குறியீடுகள் 
பயன்படுத்தப்படுகின்றன.

வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட்கள்.  

🌀பச்சை எச்சரிக்கை (Green Alert), 

🌀மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert),  

🌀அம்பர் அல்லது ஆரஞ்ச்           எச்சரிக்கை (Amber Alert)      

🌀சிவப்பு எச்சரிக்கை (Red Alert) 


பச்சை எச்சரிக்கை (Green Alert) :  

பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே இந்த எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.

மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) :   

வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.

அம்பர் அல்லது ஆரஞ்சு எச்சரிக்கை (Amber Alert): 

பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையைத் தரும். இது போன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது  நலம்.

சிவப்பு எச்சரிக்கை    (Red Alert) :

 மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது இந்த எச்சரிக்கை அளிக்கப்படும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்ற எச்சரிக்கைகள் விடப்படும்.




Post a Comment

0 Comments