விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள
TNPDS என்ற இணையதளம் மூலம் நாமே புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், குடும்ப உறுப்பினர் பெயர் நீக்குதல், குடும்ப தலைவர் பெயர் மாற்றம், மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்யலாம்.
அவ்வாறு விண்ணப்பித்த பிறகு நமது விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் நமது MOBILE மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.
TNPDS இணையதளத்தில் 3 வகையான சேவை நிலை அறிதல் கொடுக்கப்பட்டு உள்ளது.
1.மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை
2.நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலை
3.அட்டை தொடர்பான சேவை நிலை அறிய
1.மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை
இந்தப் பகுதியில் புதிதாக மின்னணு
அட்டை விண்ணப்பிப்பவர்கள் தங்களின் குறிப்பு எண் வைத்து தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
2.நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலை
நமது குடும்ப அட்டை தொலைந்து போனாலோ அல்லது திருத்தம் செய்யப்பட்ட புதிய அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் போதோ இந்தப் பகுதியில் குறிப்பு எண் பதிவிட்டு நமது விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
3.அட்டை தொடர்பான சேவை நிலை அறிய
குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல்,
முகவரி மாற்றம் செய்யதல், குடும்பத் தலைவரை மாற்றம் செய்யதல்,
குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம்,
அட்டை வகையை மாற்றம் செய்தல்
போன்ற சேவைகளுக்கு மட்டும் இந்த பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவற்றை மாற்றி பதிவிட்டால் குறிப்பு எண் இல்லை என வரும். எனவே நாம் எந்த சேவையின் நிலையை அறிய வேண்டுமோ அதற்கான சரியான இடத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
புதிய மின்னணு குடும்ப அட்டை நிலை அறிய Click here
•முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்.
•முகப்பில் மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை என்பதை Click செய்யவும்.
•பிறகு குறிப்பு எண்ணை பதிவு செய்யவும்.
( குறிப்பு எண் - விண்ணப்பத்தைப் பதிவு செய்த போது, உங்களது மொபைல் எண்ணுக்கு 14 இலக்க எண் அனுப்பபட்டு இருக்கும்.)
•அந்த குறிப்பு எண் - ஐ கீழே உள்ளது போல கட்டத்தில் பதிவிடவும்.
•தற்போது நமது விண்ணப்பத்தின் நிலையை காண முடியும்.
மின்னணு அட்டை தொடர்பான சேவை அறிய Click here
•முகப்பில் உள்ள அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என்பதை தேர்வு செய்யவும்.
•அதில் குறிப்பு எண்- ஐ பதிவு செய்து நமது விண்ணப்பத்தின நிலையை அறிந்து கொள்ளலாம்.
பதிவு சார்ந்த கருத்து மற்றும் சந்தேகம் இருந்தால் comment
செய்யவும்.
இது போன்ற பதிவுகளை காண
செய்திசுரபி பக்கத்தை FOLLOW
செய்யவும்.
0 Comments